Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

போர்க்காலக் கவிதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

அகதிகள்

நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்

ஊர்விட்டு ஊர் வந்தோம்
ஊமையாய் அழுகின்றோம்
ஊனங்கள் நமக்கில்லை
ஊரைத்தான் நினைக்கின்றோம்

---