Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

போர்க்காலக் கவிதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

காலனே காத்திரு!

காலமது வந்து விட்டால்
காலனவன் உயிர் பறிப்பான்
பெரியவர்கள் சொன்னார்கள்
படித்தறிந்த உண்மைகளாய்

எம் மண்ணில் உள்ளவர்கள்
எப்படித்தான் பிறந்தனரோ
அனைவரின் வாழ்க்கையுமே
அரைகுறையில் போகிறதே

பாவங்கள் செய்தவரை
பாவியாய் படைத்திடுவர்
எவ்வகையில் அடங்கிடுவர்
எம்நாட்டுத் தமிழ் மக்கள்

அனுபவிக்கும் வயதினரும்
அனுபவித்த வயதினரும்
பால் குடிக்கும் குழந்தைகளும்
பால் கொடுக்கும் தாய்மாரும்
பள்ளி செல்லும் பாலகரும்
படித்தறிந்த மேதையரும்
என்ன பிழை செய்தார்கள்
ஏனிந்த நிலையின்று
தமிழராய் பிறந்ததினால்
தானிந்த நிலபரமோ

காலனே விரையாதே
காத்திருந்து உயிரெடு
ஏனிந்த அவசரம்
எம்மினத்தை வாழவிடு

---