Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

ரசித்த சில கவிதைகள்

எனது அன்பு வேண்டுகோளிற்கு இணங்க எழில்நிலாவிற்காக நண்பர் கவிஞர் புகாரி
அவர்களால் எழுதப்பட்ட கவிதை இது.


யுத்தம் இல்லாத பூமி வேண்டும்!

புத்தம் புதிதாகப்
….பிறக்க வேண்டும்

நித்தம் விடிவானில்
….பறக்க வேண்டும்

செத்த விலங்கோடும்
….அன்பு வேண்டும்

சித்தம் கலையாத
….பண்பு வேண்டும்

புத்தம் மறவாத
….புனிதம் வேண்டும்

ரத்தம் பழகாத
….மனிதம் வேண்டும்

சத்தம் வெல்லாத
….அமைதி வேண்டும்

யுத்தம் இல்லாத
….பூமி வேண்டும்

-கவிஞர் புகாரி