Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

போர்க்காலக் கவிதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

விமானங்கள்

ஊனமுது கொள்வதில்லை
ஊரவரை நினைத்துவிட்டால்
சயனிக்க மனமில்லை
சஞ்சலமே நிறைந்ததனால்

எண்ணற்ற ரகங்களிலே
எண்ணி விடமுடியாமல்
வானத்தில் வட்டமிடும்
வஞ்சகரின் விமானங்கள்

பறந்துசெல்லும் புக்காரா
பாராமல் குண்டு போடும்
பங்கருக்குள் இருந்தென்ன
பதம் பார்த்தே தீர்த்துவிடும்

---