Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

போர்க்காலக் கவிதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

உயிர்

சூல் கொண்ட மேகங்கள்
சூழ்ந்தங்கே வந்ததினால்
சுடர் தந்த சூரியனும்
சுடரொளியை மறைத்துவிட்டான்

குளிர்காலம் வந்ததினால்
குளிர்தாங்க முடியாமல்
ஊர் விட்டு ஊர் செல்லும்
உயிர்காக்கப் பறைவையினம்

போர்க்காலம் வந்ததினால்
பயம் தாங்க முடியாமல்
ஊர்விட்டு ஊர் செல்லும்
உயிர் காக்க மனித இனம்

---